sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு

/

பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு

பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு

பத்திரப்பதிவு துறையில் 20 வகையாக முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு

13


ADDED : நவ 01, 2024 05:00 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:00 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான, முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை நிலம், வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்கிறது. இதற்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.

முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசு கருவூலத்துக்குத் தேவையான வரி கிடைக்கும். அதில் குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி, செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ. 40 ஆயிரம், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் என உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என்பது ரூ.10 ஆயிரம் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என்பது ரூ.40 ஆயிரம் எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என்பது ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என்பதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் மாற்றியமைத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

கடந்த ஆண்டு பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது. அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது.

-நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us