sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 'சீட்'; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு

/

 தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 'சீட்'; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு

 தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 'சீட்'; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு

 தி.மு.க.,வில் இளைஞரணிக்கு 40 'சீட்'; மாநாட்டுக்கு பின் உதயநிதி எதிர்பார்ப்பு

10


ADDED : டிச 16, 2025 05:21 AM

Google News

10

ADDED : டிச 16, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் சட்டசபை தேர்தலில், 40 தொகுதி களில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க.,வின் இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு, திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடந்தது. வடக்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டுக்கு, துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை வழங்கினார். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் மாநாடு என்பதால், அம்மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதை உணர்த்தும் வகையில் உதயநிதி பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலில், இளைஞரணி நிர்வாகிகள் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். 'இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன் ஆகியோர் நிறைவேற்றி தர வேண்டும்' என்றார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும்கூட, சட்டசபை தேர்தலில் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில், 38 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., இளைஞரணி முடிவு செய்துள்ளது. அதனால், 40 தொகுதிகளை கட்சி தலைமையிடம் கேட்டு பெற முடிவெடுத்துள்ளார், இளைஞர் அணி செயலரான உதயநிதி.



இது குறித்து, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், இளைஞரணி செயலர் பதவியை உதயநிதி ஏற்றார். தமிழகம் முழுதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இளைஞரணி சார்பில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், பிரபாகர் ராஜா உட்பட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஈரோடு எம்.பி., பிரகாஷுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, தி.மு.க., இளைஞரணி நிர்வாகத்தின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 5 லட்சம் நிர்வாகிகள் தி.மு.க., இளைஞர் அணியில் உள்ளனர். அப்படியொரு கட்சி தி.மு.க., மட்டுமே.

சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க., சார்பில் அதிகளவில் இளைஞர்களை களமிறக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இம்முறை தி.மு.க., சார்பில் கூடுதல் எண்ணிக்கையில், கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க வேண்டும் என்பதில் உதயநிதி உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிருப்தியில் ஐ.டி., அணி


திருவண்ணாமலை மாவட்டத்தில், தி.மு.க., இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, மாநாடு போல சிறப்பாக நடத்தப்பட்ட பின், கட்சியில் இளைஞரணியினருக்கான முக்கியத்துவம் கூடியிருப்பதாக, இளைஞரணி செயலரான உதயநிதி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினரை கண்டுகொள்ளாமல், தி.மு.க., தலைமை புறக்கணித்து வருவதாக, அவ்வணியைச் சேர்ந்தோர் கொந்தளிப்பில் உள்ளனர்.
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப அணி செயலராக அமைச்சர் தியாகராஜன் இருந்தவரை, அவ்வப்போது மண்டல அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன; பங்கேற்போருக்கு உணவு, செலவிற்கு பணம், மொபைல் போன் போன்றவை வழங்கப்பட்டன. தற்போது தகவல் தொழில்நுட்ப அணியினரை, கட்சி தலைமை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், தகவல் தொழில்நுட்ப அணியினர் தான், சமூக வலைதளங்களில் கட்சிக்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்; எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி தருகின்றனர்; அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்றனர்.
தற்போது நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் கூட, தகவல் தொழில்நுட்ப அணியினரின் பங்கு அதிகம். ஆனால், கட்சியில் இளைஞர் அணியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கட்சி தலைமையின் செயல், ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையில் உள்ளது. இது, ஒரு தரப்பினரின் உற்சாகத்தை குலைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us