sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

யாசகம் கேட்கும் குழந்தை... யாருக்கு பிறந்த பிள்ளையோ!

/

யாசகம் கேட்கும் குழந்தை... யாருக்கு பிறந்த பிள்ளையோ!

யாசகம் கேட்கும் குழந்தை... யாருக்கு பிறந்த பிள்ளையோ!

யாசகம் கேட்கும் குழந்தை... யாருக்கு பிறந்த பிள்ளையோ!

10


ADDED : ஜன 19, 2025 02:21 PM

Google News

ADDED : ஜன 19, 2025 02:21 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவையில் காந்திபுரம், பீளமேடு, சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிக்னலில் யாசகம் எடுக்கும் குழந்தைகளும், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் எடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும், அதிகம் பார்க்க முடிகிறது.

இக்குழந்தைகள் நிஜமாகவே, இப்பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் என்றால் பிரச்னை இல்லை. ஆனாலும், பச்சிளங்குழந்தைகளை காண்பித்து யாசகம் கேட்பது தவறு என்கின்றனர் போலீசார். இக்குழந்தைகள் பசியால் மயங்கி கிடக்கிறார்களா, அல்லது டோஸ் குறைந்த மயக்க மருந்தை புகட்டி, பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களா எனும் சந்தேகம் எழுகிறது.

தேசிய குற்ற ஆவண காப்பக (என்.சி.ஆர்.பி.,) 2023 டிச., மாதம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, இந்தியாவில் இதுவரை மொத்தமாக பதிவான புகார்களின் படி, 47,000க்கும் மேல் குழந்தைகள் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும், அதில் 71.4 சதவீதம் மைனர் பெண் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, 2022ம் ஆண்டில் மட்டும், 83,350 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டு, 80, 561 பேரை கண்டுபிடித்துள்ளனர்; 2789 குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் புகார்களில் சுமார், 90 சதவீதம் கடத்தப்பட்ட பதிவாகவே உள்ளது.

கடத்தப்பட்ட குழந்தைகள் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற புள்ளிவிபரங்களை பார்க்கையில், சிக்னலில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் குழந்தைகளும், கடத்தப்பட்டுதான் இருப்பார்களோ என்ற அச்சம் எழாமல் இல்லை.

அந்த குழந்தைகள் மீது பரிதாபப்பட்டு, பண உதவி செய்வதை, ஒட்டுமொத்தமாக நாம் நிறுத்திக்கொண்டால் மட்டுமே, இது போன்ற கடத்தல்களை தடுக்க முடியும்.

இக்குழந்தைகள் நிஜமாகவே, இப்பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் என்றால் பிரச்னை இல்லை. ஆனாலும், பச்சிளங்குழந்தைகளை காண்பித்து, யாசகம் கேட்பது தவறு என்கின்றனர் போலீசார்.

இக்குழந்தைகள் பசியால் மயங்கி கிடக்கிறார்களா, அல்லது டோஸ் குறைந்த மயக்க மருந்தை புகட்டி, பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களா எனும் சந்தேகம் எழுகிறது.

அழைக்க வேண்டிய எண்


கண்டால் அழைக்க வேண்டிய எண் '1098'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா கூறுகையில், '' குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது கூடாது. இதுபோன்ற புகார்கள் வந்தாலோ, நாங்கள் பார்த்தாலோ அவர்களுக்கு உடனடியாக தங்கும் வசதிகளை மேம்படுத்தி, மேற்கொண்டு இதில் ஈடுபடாத வகையில் கண்காணிப்போம். குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதை கண்டால், பணம் கொடுக்காமல், 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us