sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தளவாயிடம் பா.ஜ., - தி.மு.க., தரப்பில் பேச்சு?

/

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தளவாயிடம் பா.ஜ., - தி.மு.க., தரப்பில் பேச்சு?

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தளவாயிடம் பா.ஜ., - தி.மு.க., தரப்பில் பேச்சு?

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தளவாயிடம் பா.ஜ., - தி.மு.க., தரப்பில் பேச்சு?

3


ADDED : அக் 21, 2024 05:24 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:24 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ.,வில் இணைந்தால் கவர்னர் பதவி, தி.மு.க.,வில் இணைந்தால் அமைச்சர் பதவி வழங்குவதாக அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரத்திடம், இரு தரப்பிலும் பேச்சு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வலியுறுத்தல்


ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பங்கேற்றதால், அவர் வகித்த அமைப்புச் செயலர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலர் பதவியை, அ.தி.மு.க., தலைமை பறித்தது.

இதற்கு, பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. கட்சித் தலைமை பதவியை பறித்ததால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம் தன் ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பா.ஜ., டில்லி மேலிடத் தலைவர் ஒருவரும், ஹிந்து ஆன்மிக நிறுவனமான விவேகானந்தா கேந்திரா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரும், தளவாயை பா.ஜ.,வில் சேர, அழைப்பு விடுத்து உள்ளனர். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்தால், அடுத்த ஆண்டில் அவருக்கு கவர்னர் பதவி வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.

அதேபோல் தி.மு.க.,வில் இணைந்தால், இடைத்தேர்தல் நடத்தி அவரை அமைச்சராக்குவதாக, முதல்வரின் குடும்ப உறுப்பினருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி தரப்பில் பேசியுள்ளனர்.

நல்ல முடிவெடுப்பார்


தாதுமண் தொழில் அதிபர் ஒருவர், பா.ஜ.,வில் இணையும்படி வலியுறுத்தி உள்ளார். இதை அறிந்த அ.தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள், வேறு கட்சிக்கு செல்லும் முடிவை எடுக்க வேண்டாம்; பொறுமையாக இருங்கள் என தளவாய் சுந்தரத்திடம் கூறியுள்ளனர்.

இது குறித்து, தளவாய் சுந்தரத்துக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், 'தளவாய்க்கு சட்டக் கல்லுாரியில் 'சீட்' கிடைக்க எம்.ஜி.ஆர்., உதவி புரிந்துள்ளார். ராஜ்யசபா எம்.பி., அமைச்சர் பதவிகளை ஜெயலலிதா வழங்கினார். 'டில்லி பிரதிநிதி பதவியை பழனிசாமி வழங்கினார். எனவே, அவர் அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற ரொம்பவும் யோசிக்கிறார்; விரைவில் நல்ல முடிவெடுப்பார்' என்றார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us