sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

விவசாயியாக அ.தி.மு.க., நிர்வாகி 'ஆக்டிங்'; பழனிசாமி கடும் கோபம்

/

விவசாயியாக அ.தி.மு.க., நிர்வாகி 'ஆக்டிங்'; பழனிசாமி கடும் கோபம்

விவசாயியாக அ.தி.மு.க., நிர்வாகி 'ஆக்டிங்'; பழனிசாமி கடும் கோபம்

விவசாயியாக அ.தி.மு.க., நிர்வாகி 'ஆக்டிங்'; பழனிசாமி கடும் கோபம்

9


UPDATED : பிப் 13, 2026 10:04 AM

ADDED : பிப் 13, 2026 06:09 AM

Google News

9

UPDATED : பிப் 13, 2026 10:04 AM ADDED : பிப் 13, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், பயிர்கள் பாதிப்பு குறித்து பார்வையிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை நோக்கி, 'விவசாயிகளை காப்பாற்றுங்கள்' என, 'பசுமையான' பயிர்களுடன் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் ஓடிவந்த நிகழ்வு கேலியாக, மாறிப்போய் உள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த கட்சியினர் மீது, பழனிசாமி கோபமாக உள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, கடந்த 8ல் பார்வையிட்ட பழனிசாமி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயி ஒருவர், 'விவசாயிகளை காப்பாற்றுங்கள்' என கதறி அழுதுகொண்டே, நெற்பயிர்கள் மற்றும் மண்வெட்டியுடன் பழனிசாமியை நோக்கி ஓடி வந்து முறையிட்டார்.

இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்தோர் பலரும், அரசியல் கேலிக்கூத்து என மிகக் கடுமையாக பழனிசாமியை விமர்சித்து வருகின்றனர்.

பழனிசாமியை நோக்கி விவசாயியாக ஓடி வந்தவர், தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கலியராஜ் என்பதையும் குறிப்பிட்டு விமர்சிக்கின்றனர். இந்தத் தகவல் பழனிசாமிக்கு செல்ல, விவசாயியை ஏற்பாடு செய்த அ.தி.மு.க., நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கட்சி வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us