sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு

/

சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு

சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு

சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு

12


UPDATED : டிச 25, 2025 06:55 AM

ADDED : டிச 25, 2025 06:06 AM

Google News

12

UPDATED : டிச 25, 2025 06:55 AM ADDED : டிச 25, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெருங்கிய உறவு சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு துாக்குத்தண்டனை விதித்து நெல்லை 'போக்சசோ ' நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலி தொழிலாளி பால் இசக்கி, 47. இவரது நெருங்கிய சொந்தக்கார, 14 வயது சிறுமி பால்இசக்கியின் பராமரிப்பில் உள்ளார். 8 மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை பால்இசக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, போக்சோ சட்டத்தின் கீழ், பால் இசக்கியை கைது செய்தார்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்தன. நேற்று நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.

'சிறுமியை பாதுகாக்க வேண்டிய நபரே அவளை சிதைத்தது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம்' எனக் கூறி பால்இசக்கிக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

நிரம்பி வழியும் சிறைகள்

திருநெல்வேலி மத்திய சிறையில் 1,600 கைதிகள் உள்ளனர். இவர்களில், 500 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற, 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 200 பேர் குண்டர் சட்ட கைதிகள். மற்றவர்கள் விசாரணை கைதிகள். தமிழக சிறைகளில் போக்சோ வழக்குகளில் விசாரணை கைதிகள், 2,500 முதல் 3,000 பேர் உள்ளனர். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை, 1,200 முதல், 1,500 பேர் வரை உள்ளனர். சிறார்கள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த, மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்களில் விரைவாக விசாரிக்கப்பட்டு, கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.








      Dinamalar
      Follow us