sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லி உஷ்ஷ்ஷ்: அதகளமாகும் டில்லி அரசியல்!

/

டில்லி உஷ்ஷ்ஷ்: அதகளமாகும் டில்லி அரசியல்!

டில்லி உஷ்ஷ்ஷ்: அதகளமாகும் டில்லி அரசியல்!

டில்லி உஷ்ஷ்ஷ்: அதகளமாகும் டில்லி அரசியல்!

2


ADDED : டிச 15, 2024 03:49 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:49 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வரும் பிப்ரவரியில் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மதுபான லைசென்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனால், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்; இதைஅடுத்து ஆதிஷி முதல்வர் ஆனார்.

'டில்லி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என, கெஜ்ரிவால் சொல்லிவிட்டார். மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு, 20 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார்.

இதில், 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும், 'சீட்' வழங்கப்படவில்லை; இந்த தொகுதிகளுக்கு புதுமுகங்களை அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். அத்தோடு துணை முதல்வராக இருந்து, மதுபான ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறை சென்ற மணீஷ் சிசோடியாவின் தொகுதியும் மாற்றப்பட்டுள்ளது.

முதல்வராக, தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தவர் கெஜ்ரிவால். கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், 70ல் 62 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது, ஆம் ஆத்மி.

'இந்த முறை அந்த அளவிற்கு வெற்றி பெற முடியாது' என்கின்றனர் பா.ஜ.,வினர். ஒரு சாதாரண மனிதன் என சொல்லிக் கொள்ளும் கெஜ்ரிவால் தன் பங்களாவில், மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதற்கான வீடியோவை, பா.ஜ., வெளியிட்டுள்ளது; இதற்கு, கெஜ்ரிவால் பதிலே சொல்லவில்லை.

மேலும், 'பா.ஜ.,விலோ அல்லது காங்கிரசிலோ டில்லி முதல்வராக வர, ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த தலைவர் இல்லை; இதனால் இந்த முறையும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த முறை வந்த அளவிற்கு, மெஜாரிட்டியாக தற்போது வர முடியாது' என்கின்றனர் நடுநிலையாளர்கள்.






      Dinamalar
      Follow us