sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தர்மேந்திர பிரதான் சென்னை வருகை ரத்து; ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்

/

தர்மேந்திர பிரதான் சென்னை வருகை ரத்து; ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்

தர்மேந்திர பிரதான் சென்னை வருகை ரத்து; ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்

தர்மேந்திர பிரதான் சென்னை வருகை ரத்து; ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்

15


ADDED : பிப் 28, 2025 05:42 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:42 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை, திடீரென ரத்து செய்யப்பட்டது.

சென்னை, ஐ.ஐ.டி., யில், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்களுக்கான மாநாடு இன்று துவங்கி மார்ச் 2ம் தேதி வரை நடக்கிறது. இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைப்பதாக இருந்தது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக கல்விக்கான மத்திய ஒதுக்கீட்டு நிதியை வழங்க முடியாது' என தெரிவித்திருந்தார். இதற்கு, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மாணவர் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றன.

தர்மேந்திர பிரதானின் வருகையை எதிர்த்து, கருப்புக் கொடி காட்டப் போவதாக, காங்., - கம்யூ., கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 'தர்மேந்திர பிரதானின் வருகை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு பதில், மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், 'கருப்பு கொடி போராட்டம், தர்மேந்திர பிரதான் என்ற ஒற்றை நபரை கண்டிக்கும் போராட்டம் அல்ல; நிதி தர மறுத்து, ஹிந்திக்கு ஆதரவாக உள்ள தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிரானது. 'அதனால், இணை அமைச்சருக்கும் கருப்புக் கொடி காட்டுவோம்' என, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us