sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்

/

கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்

கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்

கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்

4


ADDED : டிச 09, 2024 05:47 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:47 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், கோவை மூன்றாவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நில அதிர்வை பதிவு செய்யும் மையம், கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.

நில அதிர்வுகள் மற்றும் நிலநடுக்கத்தை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நிலநடுக்கவியல் மையம்(என்.சி.எஸ்.,) கண்டறிந்து வருகிறது. நில அதிர்வு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, அங்கு அதற்கான புதிய கருவிகளை மையம் பொருத்தி வருகிறது.

தமிழகத்தில் இதுபோன்று சென்னை, கொடைக்கானல், சேலம் மாவட்டங்களில் ஏற்கனவே நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை கண்டறிவதற்கான மையங்கள், செயல்பட்டு வருகின்றன.

கருவிகளில் இருந்து பெறப்படும் நில அதிர்வு அளவீடுகள், டில்லியில் உள்ள என்.சி.எஸ்., ன் தலைமையகத்தில் பெறப்படும். நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் பிரிவு, 2 மற்றும், 3 என, வகைப்படுத்தப்பட்டு, அங்கு கருவிகள் பொருத்தப்படும்.

நில அதிர்வு மற்றும் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், கோவை மூன்றாவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.சி.எஸ்., சார்பில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள மையத்தில், டிஜிட்டல் சீஸ்மோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் பிராந்திய மிகக்குறைந்த அளவிலான அதாவது, 1.0 முதல், 3.0 அளவிலான பூகம்பங்களை பதிவு செய்ய முடியும்.

புது மையத்தால் கண்டறியலாம்'

என்.சி.எஸ்., விஞ்ஞானி டாக்டர் அம்பிகாபதி அம்மானி கூறியதாவது: மத்திய புவி அறிவியல் அமைச்சகம், கோவையை 'சீஸ்மிக் ஹசார்ட் மைக்ரோசோனேஷன்' என்ற வரையறைக்குள் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தின் மாநில பேரிடர் மேலாண்மையுடன் ஒருங்கிணைந்து, புதிய கண்காணிப்பு மையத்தை நிறுவியுள்ளோம். இம்மையம் வாயிலாக, 2,000 கிலோ மீட்டர் வரையிலான துாரத்துக்குள் ஏற்படும், நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை கண்டறிய முடியும்.
கடந்த அக்., மாதம், கோவை, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில், நான்கு புதிய கண்காணிப்பு மையங்களை நிறுவியுள்ளோம். நில அதிர்வு அபாய மதிப்பீட்டு ஆய்வுக்காக, கோவையை அடையாளம் கண்டு புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான தேவை. மற்ற மூன்று மையங்கள், தாசில்தார் அலுவலகங்களில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவையில் தாசில்தார், கலெக்டர் அலுவலகங்களின் அருகில், ரயில்வே ஸ்டேஷன் இருப்பதால், ரயில்கள் இயக்கத்தால், நில அதிர்வு அளவீடு பாதிக்கப்படும். இதைக்கருத்தில் கொண்டே பாரதியார் பல்கலை தேர்ந்தெடுக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us