sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி

/

டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி

டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி

டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி

14


ADDED : மார் 04, 2025 08:40 AM

Google News

ADDED : மார் 04, 2025 08:40 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அமெரிக்க முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க்கின், 'டெஸ்லா' நிறுவனத்தின், மின்சார கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை, தமிழகத்துக்கு ஈர்க்கும் முயற்சியில், மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவரை எலான் மஸ்க் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசு பேச்சு


அதன்படி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் டெஸ்லா கார் விற்பனை மற்றும் சேவை மையம் துவங்குவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, இந்தியாவில் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கவும் அது முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஆந்திரா, மஹாராஷ்டிர மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக, ஆந்திரா அரசு நிலம், மின்சார வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, டெஸ்லா முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இருப்பினும், டெஸ்லா இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புகிறது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கு ஈர்க்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, தொழில் துறையில் தனி குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர், டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு நிறுவனத்தின் கார் தொழிற்சாலை தமிழகத்தில் உள்ளது. இரு ஆண்டுகளாக முடங்கியுள்ள கார் உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக போர்டு, கார் உற்பத்தியை துவங்கப் போவதாக அறிவித்துள்ளது.

40 சதவீதம் மேல்


கடந்த ஆண்டு இறுதியில், தமிழக உயர்மட்டக் குழு, அமெரிக்கா சென்றிருந்த போதும், முதலீட்டை ஈர்ப்பது குறித்து டெஸ்லா நிறுவனத்திடமும் பேசியது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார கார் மற்றும் இருசக்கர வாகனங்களில், 40 சதவீதம் மேல் தமிழகத்தில் தான் உற்பத்தியாகின்றன.

வியட்நாமின், 'விண்பாஸ்ட்' நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், தமிழகத்தில் மின்சார கார்கள் தயாரிக்கும் ஆலையை அமைத்து வருகின்றன.

அந்த வரிசையில், டெஸ்லா ஆலையை தமிழகத்தில் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அந்நிறுவனம் துாத்துக்குடி, ஓசூர் பகுதியையும் பரிசீலனையில் வைத்துள்ளது. டெஸ்லா உடன், தமிழக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us