sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முருகக்கடவுளா விஜய்; உருவகப்படுத்தி பாடியதால் சர்ச்சை!

/

முருகக்கடவுளா விஜய்; உருவகப்படுத்தி பாடியதால் சர்ச்சை!

முருகக்கடவுளா விஜய்; உருவகப்படுத்தி பாடியதால் சர்ச்சை!

முருகக்கடவுளா விஜய்; உருவகப்படுத்தி பாடியதால் சர்ச்சை!

33


UPDATED : பிப் 04, 2026 04:02 PM

ADDED : பிப் 03, 2026 04:48 AM

Google News

33

UPDATED : பிப் 04, 2026 04:02 PM ADDED : பிப் 03, 2026 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் நேற்று நடந்த தவெக கட்சி விழாவில், விஜயை முருகக்கடவுளாக உருவகப்படுத்தி பாடல் பாடியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு விஜயும் சேர்ந்து ஆடியது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க., மூன்றாம் ஆண்டு துவக்க விழா, சென்னை அருகே பனையூர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது: கடந்த 1977ல், 'அண்ணாதுரை இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை வந்துவிட்டதே என மக்கள் கண்ணீர் வடித்தனர். அதை துடைக்கத் தான் அ.தி.மு.க., துவங்கப்பட்டது' என, எம்.ஜி.ஆர்., சொன்னார். இப்போது, 'காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்கள் அமரும் நிலை வந்துவிட்டதே' என, மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதை துடைக்கவே த.வெ.க., துவங்கப் பட்டிருகிறது.

இன்று, 'விஜய்க்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் அனுபவம் தெரியுமா?' என விமர்சிக்கின்றனர். இதே வாய் தான், எம்.ஜி.ஆர்., அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்; விளம்பரத்திலேயே வாழும் அட்டக்கத்தி வீரன்; செய்தியாளர்களை சந்திக்க தெரியாது; டில்லிக்கு அஞ்சுபவர்' என்று அன்று சொன்னது. ஆனால், அவர் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அன்று, பழுத்த அனுபவசாலிகள் என சொல்பவர்களுக்குக்கூட கோட்டை நாற்காலி பகல் கனவாகியது.

தங்களை எதிர்த்து யார் நின்றாலும், அவர்களை சிறுமைப்படுத்துவதுதான் அவர்களின் வேலை. அரசின் அராஜகங்களை, ஊழலை சுட்டிக்காட்டினால், 50 ஆண்டுகள் பழைய தகர டப்பாவை உருட்ட ஆரம்பித்து விடுவர். ஒருபக்கம், தி.மு.க., தலைமையில் சில கட்சிகளும், மறுபக்கம் பா.ஜ., தலைமையில் சில கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், எத்தனை சக்திகள் வந்தாலும், தீய சக்தியை வீழ்த்த துாய சக்தி நம்மால் மட்டுமே முடியும். 'என் கட்சியினரும், அமைச்சர்களும் செய்யும் அடாவடியை பார்க்கும்போது, எனக்கு துாக்கமே இல்லை' என, முதல்வர் ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் வருத்தப்பட்டார்.

அவர், என்றாவது அசதியாக துாங்கும்போது எழுப்பி, 'யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?' என கேட்டால், அவரை அறியாமலேயே, 'விசில்' என்று உண்மையை சொல்லி விடுவார். சமீபகாலமாக வெளியாகும் கருத்துக்கணிப்பில், பலர் உண்மையை சொல்கின்றனர். ஆனால், சிலர் நம் மீதான வெறுப்பில், கடுப்பு கணிப்புகளை வெளியிடுகின்றனர். பழைய இன்ஜின், ஓட்டை இன்ஜின் என எத்தனை இன்ஜின்கள் வந்தாலும், த.வெ.க., தான், டாப் இன்ஜின். தேர்தலில், மக்கள் ஊதும் விசில் சத்தத்தால், தீய சக்திகளும் ஊழல் சக்திகளும் தெறித்து ஓடும். இவ்வாறு விஜய் பேசினார்.


விஜய் கார் தடுத்து நிறுத்தம்!


சென்னை நீலாங்கரையில் இருந்து பனையூர் அலுவலகம் வருவதற்காக, நேற்று காலை 9:50 மணிக்கு விஜய் கிளம்பினார். அவரது கார், இ.சி.ஆர்., மெயின் ரோடு அருகே வரும்போது, முதல்வர் ஸ்டாலின் அந்த வழியாக, மாமல்லபுரத்தில் நடக்கும் சுற்றுலா மாநாட்டுக்கு சென்றார். இதனால், விஜய் வாகனம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. முதல்வரின் வருகையையும், விஜய் கிளம்புவதையும் ஏன் சரியாக திட்டமிடவில்லை என கேட்டு, உளவுத் துறையினருக்கு ஆட்சி மேலிடம், 'டோஸ்' விட்டதாக கூறப்படுகிறது.




விஜய் ஆடிய 'டான்ஸ்'


துவக்க விழாவின் ஒரு பகுதியாக மினி கச்சேரி நடந்தது. அதில், 'விஜயை பார்க்கும் இந்நாள் தான் நமக்கு தைப்பூசம்' என, விஜயை முருக கடவுளாக்கி பாடல் பாடப்பட்டது. இதையடுத்து, தன்னை புகழ்ந்து பாடும் பாடலுக்கு, பாடகருடன் சேர்ந்து நடனம் ஆடி, நிர்வாகிகளை குஷிப் படுத்தினார் விஜய்.




'நோ சான்ஸ்'


துவக்க விழாவில், புதிய பேச்சாளர்கள் சிலருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மூத்த நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட யாருக்குமே பேச அனுமதி இல்லை. இதனாலேயே, நிகழ்ச்சி முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பினார் செங்கோட்டையன்.




தி.மு.க.,வை சூடாக்கிய விஜயின் திருக்குறள்


த.வெ.க., தலைவர் விஜய் பேசும்போது, “திருவள்ளுவர் உயிரோடு இருந்தால், இந்த தீய சக்திகளைப் பற்றி, 'அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க., முதற்றே உலகு' என எழுதியிருப்பார்,'' என, கிண்டலடித்தார். இது, தி.மு.க., தரப்பை ரொம்பவே சூடாக்கி விட்டது. இதனால், விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவரை கிண்டலடித்து, அவர் மீதான வரி ஏய்ப்பு புகார், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை, கரூர் விவகாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து, சமூக வலைதளங்களில், தி.மு.க.,வினர் திருக்குறள் எழுதி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us