sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'மறுமணமில்லை' சான்று ஆண்டுதோறும் கேட்பதால் பெண் ஊழியர்கள் அவதி

/

'மறுமணமில்லை' சான்று ஆண்டுதோறும் கேட்பதால் பெண் ஊழியர்கள் அவதி

'மறுமணமில்லை' சான்று ஆண்டுதோறும் கேட்பதால் பெண் ஊழியர்கள் அவதி

'மறுமணமில்லை' சான்று ஆண்டுதோறும் கேட்பதால் பெண் ஊழியர்கள் அவதி

3


UPDATED : பிப் 13, 2025 04:47 AM

ADDED : பிப் 13, 2025 12:40 AM

Google News

UPDATED : பிப் 13, 2025 04:47 AM ADDED : பிப் 13, 2025 12:40 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களில், 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள், மறுமணம் செய்யவில்லை என்ற சான்றிதழை, ஆண்டுதோறும் வி.ஏ.ஓ.,விடம் பெற்று, ஆயுள் சான்றிதழ் புதுப்பித்தலின் போது வழங்க வேண்டும் என, அரசு போக்குவரத்து கழகம் வற்புறுத்துவது அவதியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த ஓய்வூதியரின் மனைவியான வாரிசுதாரர், 60 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், மறுமணம் செய்யவில்லை என, வி.ஏ.ஓ.,விடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனைவியான வாரிசுதாரர் பெறும் குடும்ப ஓய்வூதியத்தில், ஆயுள் சான்றிதழ் புதுப்பிக்கும் போது, வி.ஏ.ஓ., சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.

ஆன்லைனில் சுயசான்றிதழ் பதிவிட்டால் போதும். அரசு போக்குவரத்துத் துறையில் மட்டும் ஆண்டுதோறும் மறுமணம் செய்யவில்லை என்ற, வி.ஏ.ஓ., சான்றிதழ் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால், பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மற்ற அரசு துறை ஓய்வூதிய வாரிசுகளுக்கு வழங்கப்படுவதை போல, அரசு போக்குவரத்துத் துறையிலும், சுயசான்று வழங்கும் நடைமுறையை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

-- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us