sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தளவாய் சுந்தரத்திற்கு 'மாஜி' அமைச்சர்கள் ஆதரவு: பொங்கி எழுந்து குரல் கொடுக்க அழைப்பு

/

தளவாய் சுந்தரத்திற்கு 'மாஜி' அமைச்சர்கள் ஆதரவு: பொங்கி எழுந்து குரல் கொடுக்க அழைப்பு

தளவாய் சுந்தரத்திற்கு 'மாஜி' அமைச்சர்கள் ஆதரவு: பொங்கி எழுந்து குரல் கொடுக்க அழைப்பு

தளவாய் சுந்தரத்திற்கு 'மாஜி' அமைச்சர்கள் ஆதரவு: பொங்கி எழுந்து குரல் கொடுக்க அழைப்பு

6


ADDED : அக் 10, 2024 01:59 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:59 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதவிகள் பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தொடர்பு கொண்டு, கொங்கு மண்டல 'மாஜி' அமைச்சர்கள் ஆதரவும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், ''பிரிந்தவர்கள் ஒன்றிணையவும், பதவி பறிப்பை எதிர்த்தும் பொங்கி எழுந்து, தளவாய் சுந்தரம் குரல் கொடுக்க வேண்டும்,'' என, முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை, அ.தி. மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்.

இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் எனக் கூறி, அவர் வகித்த மாவட்ட செயலர் மற்றும் மாநில அமைப்பு செயலர் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி, பொதுச்செயலர் பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, அ.தி.மு.க.,வில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை திரைமறைவில் மேற்கொண்டுள்ள ஈரோடு, நாமக்கல், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், தளவாய் சுந்தரத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது, தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் அவர் பேசி சமாதானப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:

லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்காத காரணத்தால், 10 முதல் 15 தொகுதிகளை இழந்து விட்டோம் என, எஸ்.பி.வேலுமணி பேசியதற்கு, அவர்மீது பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்?

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்பாக, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என, திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளதற்கு, அவர்மீது ஏன் பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை?

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, வழிநெடுக அ.தி.மு.க.,வினரிடம் பா.ஜ., கொடியை வழங்கி வரவேற்க வைத்த பழனிசாமி, தற்போது தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமா?

லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரியின் அ.தி.மு.க., வேட்பாளரை, பழனிசாமி அறிவிப்பதற்கு முன் தளவாய்சுந்தரம் அறிவித்தார்.

பழனிசாமியின் அதிகாரத்தை தளவாய்சுந்தரம் எடுத்துக் கொண்டதற்கு பழி தீர்க்கும் வகையில், கட்சி பதவிகளை பறித்து உள்ளார்.

பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று, பதவிகள் பறிப்பை எதிர்த்து தளவாய்சுந்தரம் பொங்கி எழுந்து, குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us