sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 அரசு பணியாளர்கள் போராட்டம் தீவிரம்: டாஸ்மாக், சத்துணவு ஊழியர்கள் கைது

/

 அரசு பணியாளர்கள் போராட்டம் தீவிரம்: டாஸ்மாக், சத்துணவு ஊழியர்கள் கைது

 அரசு பணியாளர்கள் போராட்டம் தீவிரம்: டாஸ்மாக், சத்துணவு ஊழியர்கள் கைது

 அரசு பணியாளர்கள் போராட்டம் தீவிரம்: டாஸ்மாக், சத்துணவு ஊழியர்கள் கைது

3


ADDED : பிப் 04, 2026 06:25 AM

Google News

3

ADDED : பிப் 04, 2026 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மதுக்கடைகளில் பணிபுரிவோரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், குடும்பத்துடன் நேற்று கோட்டையை முற்றுகையிட சென்ற டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் ஊழியர்கள், சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகில் இருந்து, நேற்று காலை குடும்பத்துடன், தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.



இது குறித்து, சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது: டாஸ்மாக் மதுக்கடைகளில், 22 ஆண்டுகளுக்கு மேல், மிகக்குறைந்த ஊதியத்தில், 25,000க்கும் அதிகமான மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணி புரிகின்றனர். இத்தனை ஆண்டுகளாகியும், பணியாளர்களுக்கான பணி விதிகள் உருவாக்கப்படவில்லை. வார விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்கப்படுவதில்லை.

பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, மீண்டும் வேலைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுப்பு எடுக்க தடை: ஊழியர்கள் எதிர்ப்பு


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஆக்டோ - ஜியோ' என்ற அமைப்பு, நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்பு எடுக்க தமிழக அரசு நேற்று தடை விதித்தது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழக அரசு கல்லுாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலர் கோ.சுரேஷ் கூறியதாவது: ஒரு பிரதான சங்கத்திலிருந்து பல்வேறு கிளைகளாகப் பிரிந்து, மாநிலம் முழுதும் 2,000 உறுப்பினர்களுக்கும் குறைவானோருடன் இயங்கும், 'லெட்டர் பேடு' சங்கங்கள் போராட்டம் அறிவித்தாலும், ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் விடுப்பு மறுக்கப்படுவது ஏற்புடையதல்ல. இதனால், மருத்துவம், குடும்ப விசேஷங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதுபோன்ற அறிவிப்புகளுக்கு, விடுப்பு எடுக்க தடை விதிப்பதை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



சத்துணவு ஊழியர்கள்

சத்துணவுத் துறையில் அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என, 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று முதல் அங்கன்வாடி மையங்களை மூடி, பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுதும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில், கலெக்டர் அலுவலகம் அருகே, சங்க ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில், 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை பாடலாகப் பாடினர். அதன்பின் ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காத பணியாளர்கள், அருகில் உள்ள மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கும், உணவு சமைத்து வழங்கினர். மேலும், காலை உணவு திட்டத்தின் கீழும், அங்கன்வாடி மையங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.



ஊரக பணியாளர்கள்


தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று முன் தினம் முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் நாளாக நேற்று, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை, 1,000க்கும் அதிகமான பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக்கட்டாக கைது செய்து பஸ்களில் ஏற்றிச்சென்று, திருமங்கலத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்; மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



மருத்துவ பணியாளர்கள்


தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில், 3,500 பேர் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 13 ஆண்டுகளாக தற்காலிக முறையில் பணியாற்றுவதால், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், 15ம் நாளாக நேற்று, பிராட்வே - தேர்வாணையம் சாலையில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.



பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில், தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 50,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில், 4,500 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்ப வலியுறுத்தி, சங்க மாநிலச் செயலர் பீமா ராவ் தலைமையில், ஐந்தாம் நாளாக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.








      Dinamalar
      Follow us