sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'காங்., - தி.மு.க., வரலாற்று தவறுகள்': தம்பிதுரை பேச்சால் பார்லி.,யில் ரகளை

/

'காங்., - தி.மு.க., வரலாற்று தவறுகள்': தம்பிதுரை பேச்சால் பார்லி.,யில் ரகளை

'காங்., - தி.மு.க., வரலாற்று தவறுகள்': தம்பிதுரை பேச்சால் பார்லி.,யில் ரகளை

'காங்., - தி.மு.க., வரலாற்று தவறுகள்': தம்பிதுரை பேச்சால் பார்லி.,யில் ரகளை

1


ADDED : ஆக 08, 2025 03:55 AM

Google News

1

ADDED : ஆக 08, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அரசுகள், சொந்த லாபங்களுக்காக, கூட்டுச் சதி செய்து, கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டன,'' என, தம்பிதுரை ராஜ்யசபாவில் பேசியதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியல் குறித்து விவாதம் நடத்த கோரி, எதிர்க்கட்சிகளின் அமளியால், ராஜ்யசபா நேற்று மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மதியம் மீண்டும் கூடியதும், கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா மீதான விவாதம் துவங்கியது. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கு மத்தியில், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசினார்.

அவர் கூறியதாவது:

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 1974ல், அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அரசுகள் இணைந்து, கச்சத்தீவை, கூட்டுச் சதி செய்து, இலங்கைக்கு தாரை வார்த்ததே இதற்கு காரணம்.

இந்தியா - இலங்கை இடையே, 1972 மற்றும் 1974ம் ஆண்டுகளில் போடப்பட்ட இரு ஒப்பந்தங்களுமே சட்ட விரோதமானவை. இந்த வரலாற்றுத் தவறை சரி செய்யும் வகையில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து, 'தம்பிதுரை கூறிய கருத்துகளை, சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்றனர்.

பதிலுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., - எம்.பி.,க்கள் இணைந்து எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இந்த களேபரத்துக்கு இடையே, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us