sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'கன்னடம் வாழ்க' என சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா: பா.ஜ.,

/

'கன்னடம் வாழ்க' என சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா: பா.ஜ.,

'கன்னடம் வாழ்க' என சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா: பா.ஜ.,

'கன்னடம் வாழ்க' என சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா: பா.ஜ.,

11


ADDED : மே 31, 2025 03:52 AM

Google News

ADDED : மே 31, 2025 03:52 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: பா.ம.க., உட்கட்சி பிரச்சனைக்கும் பா.ஜ.,விற்கும் தொடர்பில்லை என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:


பா.ஜ.,விற்கும் பா.ம.க., உட்கட்சி பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகம் முழுதும் கோவிட் தொற்று மீண்டும் பரவி வருகிறது. அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுள்ளது.

தாய் மீதும் தாய்மொழி மீதும் பற்று இருக்க வேண்டும். அதே நேரம், நடிகர் கமல், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தவிர்க்கலாம். மொழி குறித்த ஆய்வோ, தமிழ் மொழி மீதான புகழுரையோ அவரிடம் இருந்து தேவையில்லை.

தமிழ் மொழி, அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி என்பது, உலகில் அனைவருக்கும் தெரியும். அதை கமல் சொல்லித்தான், ஊருக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.

கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல்வரால், தமக்கு பிரச்னை என கூறி இருக்கிறார் அவர். அது சரியான அணுகுமுறை அல்ல. ஒவ்வொரு தலைவரின் பூர்வீகத்தையும் பார்க்க நேரிட்டால் பிரச்னைகள் தான் வரும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, அவரை சந்தித்தவர்கள், 'கன்னடம் வாழ்க; தமிழ் ஒழிக' எனக் கூறும்படி சொன்னார்கள்.

ஆனால் ஜெயலலிதா, தன் உயிரே போனாலும் அப்படி சொல்ல மாட்டேன் என கூறினார். அப்படிப்பட்ட உறுதி மிக்கப் பெண்மணி தான் ஜெயலலிதா.

அ.தி.மு.க.,வின் புதிய ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் பட்டியலில் யார் இடம் பெறுவர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பழனிசாமி தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.






      Dinamalar
      Follow us