sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 கட்சி ஆரம்பித்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய மல்லை சத்யா

/

 கட்சி ஆரம்பித்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய மல்லை சத்யா

 கட்சி ஆரம்பித்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய மல்லை சத்யா

 கட்சி ஆரம்பித்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய மல்லை சத்யா


ADDED : நவ 22, 2025 02:40 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று முன்தினம் ஆரம்பித்த, 'திராவிட வெற்றிக்கழகம்' கட்சியின் பெயர் எங்களுடையது. முறையாக பதிவு செய்து ஓராண்டாக பயன்படுத்தி வருகிறோம். பெயரை மாற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தி.வெ.க., நிறுவன தலைவர் கே.பி. சரவணன் எச்சரித்துள்ளார்.

ம.தி.மு.க., உட்கட்சி பிரச்னையால் நீக்கப்பட்ட மல்லை சத்யா, நேற்று முன்தினம் 'திராவிட வெற்றிக்கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்தார். கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே அவருக்கு பிரச்னை துவங்கியுள்ளது.

கூடங்குளம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தேசிய தொழிலாளர் அறக்கட்டளை நிறுவனர் கே.பி. சரவணன், கடந்தாண்டு மே 1ம் தேதி, திராவிட வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

நான் 1996 முதல் 2007 வரை ம.தி.மு.க.,வில் பல்வேறு பொறுப்பில் இருந்தேன். தென்மாவட்ட தொழிலாளர்களுக்காக ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கில் கட்சியில் இருந்து வெளியேறி, 'தென்னாடு முன்னேற்ற கழகம்' ஆரம்பித்தேன்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பலரும் போராடியபோது, நாங்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தோம்.

பின்னர் 2010ல் 'தேசிய தொழிலாளர் அறக்கட்டளை' என்ற பெயரில் பதிவு செய்தோம். கடந்தாண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று 'திராவிட வெற்றிக்கழகம்' என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்து இயங்கி வருகிறோம்.

சட்ட நடவடிக்கை

இந்நிலையில் மல்லை சத்யா எங்கள் கட்சி பெயரை அப்படியே பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்து அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். தேர்தல் கமிஷனிடம், எங்கள் கட்சியை பதிவு செய்ய உள்ளோம்.

எங்களை சமரசம் செய்யும் நோக்கில் மல்லை சத்யா தரப்பினர் அணுகினால், அதை ஏற்கப்போவதில்லை. கட்சி பெயரை மாற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

திராவிடர் வெற்றிக் கழகமாகிறது மல்லை சத்யா ஆதரவாளர்கள் கூறுகையில், ''தேர்தல் கமிஷனில் கட்சி பெயரை நாங்களும் பதிவு செய்ய உள்ளோம். சட்டப்படி இப்பெயரை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதா என வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறோம். ஒரு வேளை பெயரை மாற்ற வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டால், 'திராவிடர் வெற்றிக்கழகம்' என்று மாற்றி பயன்படுத்துவோம். ''விஜய் த.வெ.க., ஆரம்பித்தபோது அதில் 'க்' இடம் பெறவில்லை என சர்ச்சை எழுந்தது. பின்னர் 'க்' சேர்க்கப்பட்டது. அதுபோல் நாங்கள் 'ர்' என சேர்த்துக் கொள்வோம். இதில் ஏதும் பிரச்னை இல்லை'' என்றனர்.








      Dinamalar
      Follow us