sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மசினகுடியில் 55 ஊர்வன, 39 நீர் வாழ்விகள்; கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு

/

மசினகுடியில் 55 ஊர்வன, 39 நீர் வாழ்விகள்; கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு

மசினகுடியில் 55 ஊர்வன, 39 நீர் வாழ்விகள்; கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு

மசினகுடியில் 55 ஊர்வன, 39 நீர் வாழ்விகள்; கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு


UPDATED : அக் 02, 2024 05:27 AM

ADDED : அக் 01, 2024 10:55 PM

Google News

UPDATED : அக் 02, 2024 05:27 AM ADDED : அக் 01, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : முதுமலை, மசினகுடியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 55 ஊர்வன மற்றும் 39 நீர் வாழ்விகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணி


முதுமலை மசினகுடி கோட்டத்தில் வனவிலங்குகள், பறவைகள், அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள், பறவைகள், புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இந்நிலையில், முதுமலை மசினகுடியில் கடந்த மாதம், 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஊர்வன மற்றும் நீர்வாழ்விகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது.

முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் தலைமையில், ஆய்வாளர்கள் சுஜித், கோபாலன், ஷெர்ஜின் மற்றும் வன சரகர்கள், வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதன் கணக்கெடுப்பு முடிகளை வனத்துறையினர் வெளியிட்டனர்.அதன்படி, கடந்த மாதம் நடந்த கணக்கெடுப்பில், 33 வகையான ஊர்வன; 36 வகையான நீர் வாழ்விகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த மாதம் மற்றும் ஏற்கனவே, நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், மசினகுடியில், 55 ஊர்வன மற்றும் 39 நீர்வாழ்விகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில், 40 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலையை வாழ்விடமாக கொண்டவை. மேலும் இங்கு அச்சுறுத்த கூடிய, 16 இனங்கள் அழியும் நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு முடிவுகள் மூலம், பல அரிய வகை ஊர்வன மற்றும் நீர் வாழ்விகளான, பல்லிகள், தவளைகள், பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை, எதிர்கால ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us