sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மவுலிவாக்கம் கட்டட விபத்து: ஸ்டாலின் வழக்கு வாபஸ்?

/

மவுலிவாக்கம் கட்டட விபத்து: ஸ்டாலின் வழக்கு வாபஸ்?

மவுலிவாக்கம் கட்டட விபத்து: ஸ்டாலின் வழக்கு வாபஸ்?

மவுலிவாக்கம் கட்டட விபத்து: ஸ்டாலின் வழக்கு வாபஸ்?

26


UPDATED : ஜன 03, 2024 04:22 AM

ADDED : ஜன 03, 2024 01:27 AM

Google News

UPDATED : ஜன 03, 2024 04:22 AM ADDED : ஜன 03, 2024 01:27 AM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை முடித்து வைக்க கோர உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், 2014ல் இடிந்து விழுந்தது. இதில், 61 பேர் பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து, அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டடம், சில ஆண்டுகள் கழித்து இடிக்கப்பட்டது.

விபத்து குறித்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், 'சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை; உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், குழு விசாரணை உள்ளது.

'எனவே, கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, அப்போதைய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடைசியாக, 2017ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு பின், நேற்று தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் , ''இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜரான வழக்கறிஞருக்கு பதிலாக ஆஜராக ஏதுவாக, 'வக்காலத்து' மனு தாக்கல் செய்ய இருப்பதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.

அப்போது, 'மாநில அரசுக்கு எதிராக, முதல்வர் வழக்கு தொடர முடியுமா? இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமா?' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ''எதிர்கட்சி என்ற முறையில், அப்போது இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 'வக்காலத்து' தாக்கல் செய்தால் தான், தங்கள் தரப்பு கருத்தை முன் வைக்க முடியும்.

''இந்த வழக்கை முடித்து வைக்க கோர உள்ளோம்,'' என, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us