sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மண் கடத்தலை தடுத்த அதிகாரி துாக்கியடிப்பு; நேர்மையை 'பந்தாடிய' அமைச்சர் பி.ஏ.,க்கள்

/

மண் கடத்தலை தடுத்த அதிகாரி துாக்கியடிப்பு; நேர்மையை 'பந்தாடிய' அமைச்சர் பி.ஏ.,க்கள்

மண் கடத்தலை தடுத்த அதிகாரி துாக்கியடிப்பு; நேர்மையை 'பந்தாடிய' அமைச்சர் பி.ஏ.,க்கள்

மண் கடத்தலை தடுத்த அதிகாரி துாக்கியடிப்பு; நேர்மையை 'பந்தாடிய' அமைச்சர் பி.ஏ.,க்கள்


UPDATED : மார் 13, 2024 03:43 AM

ADDED : மார் 13, 2024 01:13 AM

Google News

UPDATED : மார் 13, 2024 03:43 AM ADDED : மார் 13, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு ஆர்.ஐ., சிவசக்தி. பிப்., 28ல் இடையன்கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.

மண் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்து, பறிமுதல் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஆளுங்கட்சி நிர்வாகி, வாகனத்தை விடுவிக்குமாறு அதிகாரியை மிரட்டியுள்ளார்; அதிகாரி மறுத்தார்.

அடுத்து அமைச்சர் ஒருவரின் உதவியாளர்கள், ஆர்.ஐ.,யின் மொபைல் போனுக்கு பேசி வாகனத்தை விடுவிக்க கூறினர். அதற்கும் அவர் உடன்படவில்லை.

இந்நிலையில், சிவசக்தி கடந்த 5ம் தேதி பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். மண் கடத்தல் லாரியை மடக்கி பிடித்த நேர்மையான அதிகாரி பழிவாங்கப்பட்டதும், அதற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மவுனமாக இருந்ததும் நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஐ., சிவசக்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

பிப்., 28ம் தேதி ரோந்து மேற்கொண்டேன். தாராபுரம் - இடையன்கிணறு கிராமம் அருகே நம்பர் பிளேட் இல்லாத லாரி வந்தது. சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இல்லாததும், அனுமதியின்றி மண் கடத்தப்பட்டதும் தெரிந்தது.

நடவடிக்கை எடுக்க ஸ்டேஷனுக்கு லாரியை எடுத்து வருமாறு கூறினேன். டிரைவர் வர மறுத்து, சில பொய்யான காரணங்களை கூறியபடி, காலதாமதம் செய்தார்.

சற்று நேரத்தில், லாரியை விடுவிடுக்க கேட்டு, ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் காரில் வந்தனர். மினிஸ்டர் பி.ஏ., பேசுவதாக கூறி, போனை கொடுக்க, நான் வாங்க மறுத்தேன். தொடர்ந்து, என் மொபைல் போனுக்கு அழைக்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்துக்கு மேல், போனை வாங்கி பேசிய போது, லாரியை விடுவிக்க கூறினர். அவர்களின் அழுத்தம், என் பாதுகாப்பை நினைத்து, எச்சரிக்கை செய்து லாரியை விடுவித்துவிட்டு கிளம்பினேன். அடுத்த சில நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டேன். என்ன காரணம் என தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலர் சதீஷ்குமார், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:மண் கடத்தப்பட்ட லாரியை பிடித்த சிறப்பு ஆர்.ஐ., யிடம், அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டாமென மிரட்டியுள்ளனர். சில ஆளுங்கட்சியினர் நேரில் சென்றும் மிரட்டினர். இவ்விவகாரத்தில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடமையை நேர்மையாக செய்த அதிகாரிக்கு பரிசாக சட்ட விரோத கல் குவாரி கும்பலுக்கு ஆதரவாக, இயற்கை கொள்ளைக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம், அதிகாரியை பணியிட மாற்றம் செய்துள்ளது. இதில் தொடர்புடைய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரின் நேர்முக உதவியாளரின் மொபைல் போன்களை ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



விளக்கம் இல்லை


சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் உதவியாளரிடம் விளக்கம் பெற, நம் நிருபர் தொடர்பு கொண்டார். அமைச்சரை தொடர்பு கொண்டபோது, டிரைவர் போனை எடுத்து, அமைச்சர் மீட்டிங்கில் இருப்பதாகவும், அவரிடம் சொல்கிறேன் என்றும் கூறினார். அவரது உதவியாளர்களை தொடர்பு கொண்ட போது, அழைப்பை ஏற்காமல் புறக்கணித்தனர்.








      Dinamalar
      Follow us