sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'டில்லி உஷ்ஷ்ஷ்..' விருதுகளால் எதிர்க்கட்சிகளை மடக்கிய மோடி!

/

'டில்லி உஷ்ஷ்ஷ்..' விருதுகளால் எதிர்க்கட்சிகளை மடக்கிய மோடி!

'டில்லி உஷ்ஷ்ஷ்..' விருதுகளால் எதிர்க்கட்சிகளை மடக்கிய மோடி!

'டில்லி உஷ்ஷ்ஷ்..' விருதுகளால் எதிர்க்கட்சிகளை மடக்கிய மோடி!


UPDATED : பிப் 11, 2024 11:26 AM

ADDED : பிப் 11, 2024 06:19 AM

Google News

UPDATED : பிப் 11, 2024 11:26 AM ADDED : பிப் 11, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோடி எதைச் செய்தாலும், அதை கடுமையாக விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் வழக்கம். முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும் விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு, தேசத்தின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' வழங்கியதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாமல் திண்டாடுகின்றன. இதனால், பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.,விற்கு ஆதாயம் ஏற்படுமே என்கிற கவலையும் எதிர்க்கட்சிகளிடம் உள்ளது.

காங்., முன்னாள் தலைவர் சோனியா, வேறு வழியில்லாமல், 'நான் வரவேற்கிறேன்' என, இரண்டே வார்த்தையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நரசிம்ம ராவ் இறந்த பின், அவரது உடலை காங்., அலுவலகத்தில் வைக்க அனுமதி மறுத்தவர் சோனியா.

சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் சவுத்ரி, உத்தர பிரதேசத்தில், தேசிய லோக்தளம் கட்சியை நடத்தி வருகிறார். மேற்கு உ.பி.,யில் இந்த கட்சிக்கு ஆதரவு அதிகம்; காரணம், ஜாதி அரசியல். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்த ஜெயந்த், தற்போது பா.ஜ., கூட்டணிக்கு தாவுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில், மேற்கு உ.பி., தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற முடியவில்லை; தற்போது பாரத ரத்னா விருது வாயிலாக, அதை சரி செய்துவிட்டார் மோடி.

அதே போல ஆந்திரா, தெலுங்கானாவிலும் நரசிம்ம ராவிற்கு அளித்துள்ள விருதால், பா.ஜ.,விற்கு லாபம் கிடைக்கும் என, கட்சி நம்புகிறது. தமிழக விவசாய விஞ்ஞானி சுவாமி நாதனுக்கு விருது வழங்கியதன் வாயிலாக, தமிழகம் மீது மோடி அதிக கவனம் செலுத்துகிறார் என்பதும் தெரிகிறது.






      Dinamalar
      Follow us