sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட்?: ஈ.டி.,யின் அடுத்தகட்ட திட்டம் என்ன?

/

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட்?: ஈ.டி.,யின் அடுத்தகட்ட திட்டம் என்ன?

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட்?: ஈ.டி.,யின் அடுத்தகட்ட திட்டம் என்ன?

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட்?: ஈ.டி.,யின் அடுத்தகட்ட திட்டம் என்ன?


ADDED : பிப் 03, 2024 01:00 AM

Google News

ADDED : பிப் 03, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஐந்து முறை சம்மன் அனுப்பியும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக பிடி வாரன்ட் பிறப்பிக்கவோ அல்லது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி கைது செய்யவோ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது.

இது, சில குறிப்பிட்ட மதுபான தயாரிப்பாளர்கள் அதிக வருவாய் ஈட்ட வழி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது.

நடவடிக்கை


இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, புதிய மதுபான கொள்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, அமைச்சர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, நேரில் ஆஜராகும்படி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் ஐந்து முறை சம்மன் அனுப்பினர். ஐந்து முறையும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

அமலாக்கத்துறையின் சம்மனை இதுபோல் உதாசீனப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற நேரங்களில் அமலாக்கத்துறையினர் இரண்டு விதமான நடவடிக்கைகளில் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலாவதாக, சிறப்பு நீதிமன்றத்தின் வாயிலாக கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரன்ட் பெற்று, அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒத்துழைப்பு


அடுத்ததாக, ஈ.டி., அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்று, அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தவும், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருந்தால் அவரை கைது செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையின் சம்மன்களை தொடர்ச்சியாக நிராகரிப்பது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததாகவே கருதப்படும். இதுவே, கைது நடவடிக்கைக்கு அடிப்படை காரணமாகவும் அமைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒரு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபரை சம்மன் அளிக்காமலேயே கைது செய்யவும் அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.

அந்த நபர், வெளியே இருந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தால் போதும் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக இருந்த நவாப் மாலிக்கை, 2022ல் அமலாக்கத்துறையினர் அப்படி தான் கைது செய்தனர்.

ஆம் ஆத்மியினருக்கு வீட்டுக்காவல்!

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பா.ஜ., வெற்றி பெற்றுவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். பா.ஜ., ஆம் ஆத்மி தலைமையகங்கள், மத்திய டில்லியின் பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் மார்கில் சில நுாறு மீட்டர் துாரத்தில் அமைந்து உள்ளன. எனவே, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பா.ஜ., அலுவலகத்தை ஆம் ஆத்மியினர் நெருங்க முடியாத அளவுக்கு தடுப்புகள் போடப்பட்டன. ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் மற்றும் துணை மேயர் ஆலே முகமது இக்பால் ஆகியோரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் கோபால் ராய் குற்றஞ்சாட்டினார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.



- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us