sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காங்கிரசை சீரமைக்கும் பிரியங்கா; மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம்

/

காங்கிரசை சீரமைக்கும் பிரியங்கா; மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம்

காங்கிரசை சீரமைக்கும் பிரியங்கா; மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம்

காங்கிரசை சீரமைக்கும் பிரியங்கா; மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம்

4


ADDED : மார் 22, 2025 02:37 AM

Google News

ADDED : மார் 22, 2025 02:37 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மாவட்டத் தலைவர்கள், சுயமாக முடிவெடுக்க, அதிகாரம் வழங்குவது குறித்து, டில்லியில் மூன்று நாட்கள் நடக்க உள்ள, 750 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், காங்கிரஸ் மேலிடம் ஆலோசிக்க உள்ளது.

படுதோல்வி


லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருந்தாலும், டில்லி, மஹராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டது.

எனவே, கட்சியில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவும், சட்ட விதிகளை மாற்றி அமைக்கவும், காங்கிரஸ் டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுதும் கட்சியை பலப்படுத்த, பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக் தலைமையில், பிரியங்கா, மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பரிந்துரைத்த பணிகளை, மாவட்டத் தலைவர்களுக்கு வழங்கி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதல் அதிகாரம்


வரும் 26, 27, ஏப்., 3 ஆகிய தேதிகளில், டில்லியில் உள்ள இந்திரா பவனில், நாடு முழுதும் இருந்து, 750 மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.

வரும் 27ம் தேதி தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடக்க உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா தலைமையிலான காங்கிரசில், மாவட்டத் தலைவர்களுக்கு, கூடுதல் அதிகாரம் இருந்தது.

அதேபோல், தன்னாட்சி அதிகாரம், சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து தற்போதைய காங்., கட்சி மாவட்டத் தலைவர்களுக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

கூடவே, வேட்பாளர்களை தேர்வு செய்யும், மத்தியக் குழு கமிட்டியில், மாவட்டத் தலைவர்கள் இடம் பெறுவது குறித்தும், அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

காங்., கட்சியின் பொதுச்செயலராக இருக்கும் பிரியங்கா, கட்சியை சீரமைக்கும் பணியை முழு வேகத்தில் செய்கிறார். அதில் ஒரு அங்கமாகத்தான், மாவட்டத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்த ஆலோசனை என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us