sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

5 ஆண்டுகளில் 2 செ.மீ., வீதம் கடல் நீர்மட்டம் உயரும்: வல்லுனர் கருத்து

/

5 ஆண்டுகளில் 2 செ.மீ., வீதம் கடல் நீர்மட்டம் உயரும்: வல்லுனர் கருத்து

5 ஆண்டுகளில் 2 செ.மீ., வீதம் கடல் நீர்மட்டம் உயரும்: வல்லுனர் கருத்து

5 ஆண்டுகளில் 2 செ.மீ., வீதம் கடல் நீர்மட்டம் உயரும்: வல்லுனர் கருத்து

1


ADDED : டிச 21, 2024 02:14 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் கடல் நீர்மட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு, 2 செ.மீ., வீதம் உயர்வதாக வல்லுனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடல் நீர்மட்டம் உயர்வு குறித்து, சமீபத்தில் பார்லிமென்டில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளிக்கையில், '1993 - 2020ம் ஆண்டு காலகட்டத்தில், சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு, 4.31 மி.மீ., வரை உயர்ந்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியிலும் ஆண்டுக்கு, 3.3 மி.மீ., வரை கடல் நீர்மட்டம் உயர்வது, ஆய்வுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது' என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து, சென்னை அண்ணா பல்கலை காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:

காலநிலை மாற்றம் மற்றும் கரியமில வாயு உமிழ்வு உள்ளிட்ட காரணங்களால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுவாக, 100 ஆண்டுகளில், 70 முதல் 80 செ.மீ., வரை கடல் நீர்மட்டம் உயர்வதாக கூறப்படுகிறது.

புவி வெப்பமயமாதல் காரணமாக, வட கோளத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் தான் கடல் நீர்மட்டம் உயர்வதாக கருதப்பட்டது. இது தவிர, வேறு சில காரணங்களால் கடல் நீர்மட்டம் உயர்வது, சமீபத்திய ஆய்வுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

கரியமில வாயு உமிழ்வு காரணமாக, கடலில் உட்புற வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடலின் உட்புறத்தில் வெப்பநிலை அதிகரிப்பால், நீரின் அடர்த்தி தளர்கிறது. இதனால், நீரின் கொள்ளளவு அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த நிலையில் இப்படி நீரின் கொள்ளளவு அதிகரிக்கும்போது, கடல் நீர்மட்டம் படிப்படியாக உயர்கிறது. இந்த வகையில், சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் ஆண்டுக்கு, 0.4 செ.மீ., வரையும், ஐந்து ஆண்டுகளுக்கு 2 செ.மீ., வரையும் கடல் நீர்மட்டம் உயர்கிறது.

நிலப் பகுதியில் நீர்நிலைகள் அழிக்கப்படுவதும், நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதும், கடல் நீர்மட்டம் உயர காரணமாக அமைந்து விடுகிறது. கரியமில வாயு உமிழ்வு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, இதை தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலப்பகுதிக்கு என்ன பிரச்னை?

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

கடல் நீர்மட்டம் உயர்வால், கடலோரப் பகுதிகள் தான் பாதிக்கப்படும் என்று மக்கள் நினைக்கின்றனர். கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும், இதனால் பிரச்னைகள் வரும்.

உதாரணமாக, மழைக்காலங்களில் கடல் நீர்மட்ட உயரத்தை விட தாழ்வாக இருக்கும் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும். கடல் நீர்மட்டம் உயர்வால், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us