sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

உதயநிதி மகனுக்காக பெண் கலெக்டர் அவமதிப்பு?

/

உதயநிதி மகனுக்காக பெண் கலெக்டர் அவமதிப்பு?

உதயநிதி மகனுக்காக பெண் கலெக்டர் அவமதிப்பு?

உதயநிதி மகனுக்காக பெண் கலெக்டர் அவமதிப்பு?

36


ADDED : ஜன 17, 2025 05:57 AM

Google News

ADDED : ஜன 17, 2025 05:57 AM

36


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதன்முறையாக தன் மகன் இன்பநிதியுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். இன்பநிதி தன் நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். நண்பர்களுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.

மகன் இன்பநிதியை அருகில் அமரவைத்த உதயநிதி, ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து மகனுக்கு விளக்கம் அளித்தார். தன் நண்பர்களை முன் வரிசைக்கு இன்பநிதி அழைத்ததும், கலெக்டர் தன் இருக்கையை மாற்றிக் கொண்டார். இது சர்ச்சையானது.

இது குறித்து கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி அருகே இருந்த நான் எழுந்து இருக்கை மாறியது குறித்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வதந்தி பரப்புகின்றனர். அந்த நிகழ்ச்சியில் 'புரொட்டோகால்' படி தான் நான் எழுந்து நின்றேன்,'' என்றார்.

நிகழ்ச்சியை கவர் செய்த ட்ரோனை உதயநிதியும், அவரது மகனும் சில நிமிடங்கள் இயக்கினர். இன்பநிதி இயக்கிய போது சரியாக இயக்காததால், அது களத்தில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் மேல் விழுந்தது. வீரர்கள் சற்று அதிர்ச்சியாகினர்.

பா.ஜ., கண்டனம்


தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: துணை முதல்வர் உதய நிதி, ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லுார் சென்றதில் தவறில்லை. அவரின் மகன் இன்பநிதி சென்றதிலும் தவறில்லை. இன்பநிதி, தன் நண்பரோடு பின்னால் அமர்ந்து பார்ப்பதாக சொன்னதும் தவறில்லை.
ஆனால், ஒரு அமைச்சர், அமர்ந்திருந்த கலெக்டரை எழச் செய்ததோடு, பின்னர் இன்பநிதியின் நண்பரை, கலெக்டர் அமர்ந்திருந்த இடத்தில் அமரச் செய்தது மாபெரும் தவறு; அவமரியாதையின் உச்சம். சுயமரியாதை பேசுவோருக்கு மரியாதை அளிக்க தெரியாதது தான் திராவிட மாடல். உதயநிதியின் அரசியல் முதிர்ச்சியின்மை, இந்த சம்பவத்தால் தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us