sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு; மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரிப்பு

/

உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு; மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரிப்பு

உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு; மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரிப்பு

உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு; மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரிப்பு

6


ADDED : மார் 20, 2025 05:36 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:36 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்ட பதவிகளில், உதயநிதி ஆதரவாளர்கள் திணிக்கப்படுவதால், தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. ஆட்சி, கட்சி என, இரட்டை குதிரையில் சவாரி செய்யும் துணை முதல்வரால், உட்கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க முடியவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட தி.மு.க.,வில், அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நான்கு மாவட்டச் செயலர்கள் நீக்கப்பட்டனர். நேற்று முன்தினம் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் நீக்கப்பட்டு, மணி எம்.பி., நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே, புதுக்கோட்டை மாநகர செயலராக ராஜேஷ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, அதிருப்தி கோஷ்டியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அமைப்பு ரீதியாக, மாவட்டங்களை பிரிக்கும் பணி, 75 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முழுமை பெறாததால், கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

புலம்பல்


துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களை, கட்சி நிர்வாகத்தில் வலிந்து திணிக்க முயற்சிப்பதால், மாவட்ட வாரியாக அதிருப்தி கோஷ்டிகள் அதிகரித்து வருகின்றன. கட்சி, ஆட்சி என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்யும் உதயநிதி, ஒரு சிலரின் பேச்சை கேட்டு எடுக்கும் முடிவு, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கட்சியினர் புலம்புகின்றனர்.

'இதை சரி செய்ய, முதல்வர் ஸ்டாலின், கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கோஷ்டி பூசல்களை சரி செய்ய, சாட்டையை சுழற்ற வேண்டும்' என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


விழுப்புரம் மாவட்டத்தில், வன்னியர் சமூகத்தை சேர்ந்த லட்சுமணனுக்கு மாவட்டச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை, விழுப்புரம் அறிவாலயம் அலுவலகத்தில் உள்ள, மாவட்டச்செயலர் அறைக்கு, அமைச்சர் பொன்முடி அனுமதிப்பதில்லை. அந்த அலுவலகத்தில், தான் மட்டும் இருந்து கோலோச்ச வேண்டும் என, அவர் விரும்புகிறார்.

தொய்வு


இதனால், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், லட்சுமணனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க அச்சப்படுகின்றனர். இது, விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் பெரும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. இதற்கு தீர்வு காண, உதயநிதியை சந்தித்து பேச, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் சென்றால், அவர்களை இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்து, இறுதியில் சில நிமிடங்கள், புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி விடுகிறார்.

உட்கட்சி பிரச்னையை தெரிவிக்க முயன்றால், அதை கேட்காமல் அலட்சியமாக இருக்கிறார். அவரை சுற்றி, இளைஞரணி நிர்வாகிகள், இரும்புத் திரையாக இருந்து, கட்சியினரை சுதந்திரமாக சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்தி உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டச்செயலராக அமைச்சர் காந்தி உள்ளார். அவரது உடல் நலம் கருதி, அம்மாவட்டத்தை பிரித்து, வேகமாக செயல்படக் கூடியவர்களை, மாவட்ட செயலர்களாக நியமிக்க வேண்டும் என, பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. மாவட்டங்கள் பிரிப்பிலும், தொய்வு ஏற்பட்டுள்ளது.

எச்சரிக்கை


தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் தடங்கம் சுப்பிரமணி மாற்றப்பட்டு, தர்மச்செல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கலெக்டர், எஸ்.பி.,யை மிரட்டும் வகையில் பேசியதால், அவர் மாற்றப்பட்டார். புதிய மாவட்ட பொறுப்பாளராக மணி எம்.பி., நியமிக்கப்பட்டார். இதனால் அங்கும் தேவையில்லாமல் 3 கோஷ்டிகள் உருவாகி உள்ளன.

புதுக்கோட்டை மாநகர செயலர் செந்தில் மறைவுக்கு பின், அப்பதவிக்கு, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களை நியமிக்க, கட்சி தலைமையிடம் காய் நகர்த்தினர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர் ராஜேஷை, மாநகர பொறுப்பாளராக நியமிக்க, அமைச்சர் மகேஷ் ஏற்பாடு செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர் கோஷ்டியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தேர்தல் அனுபவம் இல்லாத நபரை, மாநகர பொறுப்பாளராக நியமித்தால், புதுக்கோட்டை தொகுதி தி.மு.க.,விற்கு கிடைக்காது என, கட்சி தலைமைக்கு மாவட்ட நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி, பல மாவட்டங்களிலும் கோஷ்டி மோதல் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us