sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 வாக்காளர் பட்டியல் திருத்தம்: 12 மாநில நிர்வாகிகளுடன் காங்., நாளை ஆலோசனை

/

 வாக்காளர் பட்டியல் திருத்தம்: 12 மாநில நிர்வாகிகளுடன் காங்., நாளை ஆலோசனை

 வாக்காளர் பட்டியல் திருத்தம்: 12 மாநில நிர்வாகிகளுடன் காங்., நாளை ஆலோசனை

 வாக்காளர் பட்டியல் திருத்தம்: 12 மாநில நிர்வாகிகளுடன் காங்., நாளை ஆலோசனை


ADDED : நவ 16, 2025 11:39 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கும், 12 மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மாநிலத் தலைவர்களுடன், காங்., மேலிடம் நாளை ஆலோசனை நடத்துகிறது.

பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பீஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி தீவிரமாக நடக்கிறது. இதில், தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வரும் தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, ம.பி., - உ.பி., உட்பட 12 மாநிலங்களின் கட்சி நிர்வாகிகளுடன், காங்., மேலிடம் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறது. டில்லியில் நடக்கும் இந்த ஆலோசனையில், கட்சியின் மாநில தலைவர்கள், செயலர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us