நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு பூத நாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டில் காமாட்சியம்மன் சமேத பூத நாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு மூலிகைகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, காமாட்சியம்மன், பூதநாதீஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

