/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா
/
தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா
ADDED : மே 22, 2024 01:18 AM

காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க காக்கை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட, திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த 12ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும், கடந்த 14ம் தியாகராஜர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் நடந்தது.
பின் பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த19ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகி அருணகிரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

