sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்

/

திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்

திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்

திருபுவனையில் 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல்


ADDED : ஜூலை 30, 2024 05:13 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: திருபுவனையில் 100 நாள் திட்ட பணியை பாதியில் நிறுத்தியதால் பயனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபுவனை பெரியபேட் பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஏரி மற்றும் குளங்கள் துார்வாறும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 9.00 மணிக்கு பெரியபேட் பகுதி மக்கள் 100 நாள் வேலை திட்டப் பணிக்குச் சென்றனர். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தற்போது வேலை நிறுத்தப்பட்டுள்ளது அடுத்த வாரம் வேலைக்கு வருமாறு கூறியுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த பயனாளிகள், திருபுவனை மேம்பாலம் அருகில் காலை 9.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருபுவனை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசார் அதிகாரியிடம் பேசி 100 நாள் வேலை திட்ட பணியை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று காலை 10.30 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us