ADDED : ஏப் 27, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூரில் பழமை வாய்ந்த பூலோக மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு 108 பால்குட அபிேஷகம் நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் நேற்று காலை 9:00 மணியளவில் கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்து மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். 10:00 மணிக்கு உலக நண்மை வேண்டிய பூலோகம் மாரியம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

