ADDED : ஜூலை 12, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இடையார்பாளையம் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 108 பால்குட அபி ேஷகம் விழா நேற்று நடந்தது.
அரியாங்குப்பம் அடுத்த இடையார்பாளையம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 16ம் ஆண்டு திருமஞ்சன விழா மற்றும் திருக்கல்யாண வைபவம் நேற்று துவங்கியது.
இதையொட்டி காலை 7:30 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. காலை 8:30 மணிக்கு உலக நன்மை வேண்டி பெண்கள் எல்லையம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.