/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் மூலநாதர் கோவிலில் 108 கலசாபிஷேகம்
/
பாகூர் மூலநாதர் கோவிலில் 108 கலசாபிஷேகம்
ADDED : மே 21, 2024 05:00 AM

பாகூர்: உலக நன்மை வேண்டி, பாகூர் ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, கடந்த 4ம் தேதி முதல் மூலநாதர் சுவாமிக்கு தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக நன்மை வேண்டி, சென்னை மணிமங்கலம் படப்பை புஜ்ஜியஸ்ரீ முரளிதர சுவாமிகளின் அருளாசியுடன் நேற்று ஸ்ரீமூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி, காலை 7.30 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, 11 முறை ருத்ரபாராயணம், விசேஷ ேஹாமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 10.00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

