/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் கைது
/
பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் கைது
ADDED : ஏப் 30, 2024 05:16 AM
திருக்கனுார்: திருக்கனுார் மற்றும் காட்டேரிக்குப்பத்தில் பொது இடத்தில் மது அருந்திய ௧௧ பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது, பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த, விழுப்புரம் சபரிநாதன், 31; ராஜேஷ், 23; சிவக்குமார், 34; ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பொது இடத்தில் மது அருந்திய விழுப்புரம் குன்னம் சுரேஷ்குமார், 33; முத்துவேல், 28; ஜெயமூர்த்தி, 28; வானுார் பரிக்கல்பட்டு பாஸ்கரன், 30; ஆனந்தகுமார், 25; வானுார் சிவராஜ், 25; தொரவி ரஞ்சித், 37; மயிலம் அய்யனார், 35; ஆகியோரை கைது செய்தனர்.

