sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காலாப்பட்டு கடற்கரையில் 1.2 டன் குப்பைகள் அகற்றம்

/

காலாப்பட்டு கடற்கரையில் 1.2 டன் குப்பைகள் அகற்றம்

காலாப்பட்டு கடற்கரையில் 1.2 டன் குப்பைகள் அகற்றம்

காலாப்பட்டு கடற்கரையில் 1.2 டன் குப்பைகள் அகற்றம்


ADDED : ஜூன் 09, 2024 04:10 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி சார்பில், காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் சிறப்பு துப்புரவு பணி மூலம், 1.2 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி சார்பில், உலக கடற்கரை தினத்தை முன்னிட்டு பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் சிறப்பு துப்புரவு பணி நேற்று நடந்தது. துப்புரவு பணியினை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் கிளமெண்ட் லுார்து மற்றும் தனியார் நிறுவன மேலாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கடற்கரை துாய்மை பாதுகாப்போம் என, உறுதிமொழி ஏற்றனர். பின், கடற்கரை பகுதியை சுத்தம் செய்து, சுமார் 1.2 டன் குப்பைகளை அகற்றினர்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறும், நெகிழியால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆணையர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






      Dinamalar
      Follow us