sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஐ போன் பறித்த 2 பேர் கைது

/

ஐ போன் பறித்த 2 பேர் கைது

ஐ போன் பறித்த 2 பேர் கைது

ஐ போன் பறித்த 2 பேர் கைது


ADDED : பிப் 22, 2025 04:54 AM

Google News

ADDED : பிப் 22, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் அருகே போதையில் நண்பரை தாக்கி மொபைல் போன், மோதிரத்தை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் சபீர்,20. இவரது நண்பர்கள் வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான வாழப்பட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் ஞானவேல், 22; வெங்கடாஜலபதி மகன் மதன்குமார், 23. மூவரும் நேற்று முன்தினம் இரவு பெரம்பை சுடுகாடு பகுதியில் மது அருந்தினர்.

போதையில் ஞானவேல் மற்றும் மதன்குமார் ஆகியோர் சபீரை தாக்கி, அவரிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐ போன், மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து சபீர், வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப் பதிவு செய்து, மதன்குமார் மற்றும் ஞானவேல் ஆகியோரை கைது செய்தனர். போன் மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us