ADDED : மே 10, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அருகே நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், உருளையன்பேட்டையை சேர்ந்த சுரேஷ், 42; வஜ்ரவேலு, 40; என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.