ADDED : ஜூன் 03, 2024 04:05 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : மாகியில் அரிசி மூட்டைகளை கடத்திய இரண்டு பேரை பறக்கும் படையினர் கைது செய்தனர்.
மாகி அடுத்த பள்ளூர் பகுதியில் அரிசி மூட்டைகள் கடத்துவதாக பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, ஏரட்டா பிலகோல் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 10 கிலோ கொண்ட 800 அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
லாரியில் வந்த இருவரிடம் போலீசார் நடத்தி விசாரித்தில், அவர்கள் அலக்கோடு ரிதீஷ்,38, எர்ணாகுளம் சரத், 37, என்பது தெரியவந்தது. அதையடுத்து, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, லாரியில் வந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
