/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருவேறு விபத்துகளில் கடலுாரை சேர்ந்த 2 பேர் பலி
/
இருவேறு விபத்துகளில் கடலுாரை சேர்ந்த 2 பேர் பலி
ADDED : மே 02, 2024 12:30 AM
பாகூர், : கன்னிக்கோவில் மற்றும் முள்ளோடையில் நடந்த சாலை விபத்துகளில், கடலுாரை சேர்ந்த இருவர் இறந்தனர்.
கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் கதிர்வேலன், 28; புதுச்சேரியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 29ம் தேதி நள்ளிரவு பல்சர் பைக்கில் (பி.ஒய் 01 சி.டி 3624) கன்னியக்கோவில் சீனுவாசா கார்டன் சந்திப்பு அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த கதிர்வேலன் புதுச்சேரி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மற்றொரு விபத்து
கடலுார், தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் லட்சுமணன்,53; மீனவரான இவர் நேற்று அதிகாலை சொந்த வேலையாக புதுச்சேரி, முள்ளோடைக்கு வந்தவர், அங்குள்ள சாராயக்கடை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற கார் மோதியது. அதில், படுகாயமடைந்த அவரை மீட்டு, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியி்ல இறந்தார்.
இவ்விரு விபத்துகள் குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

