sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

23 ஆடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

/

23 ஆடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

23 ஆடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

23 ஆடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை


ADDED : ஜூன் 12, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கட்டளை கிராமத்தில், பட்டியில் இருந்த 23 ஆடுகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மரக்காணம் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 68; இவரது மனைவி தெய்வாணை, 55; இருவரும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்களது விவசாய நிலத்தில் இரண்டு ஆட்டு பட்டி அமைத்து இரவு நேரத்தில் அதில் ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு அருகிலுள்ள வீட்டிற்கு சென்று தங்கிவிடுவர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் ஆட்டு பட்டிக்கு சென்று, 23 ஆடுகளை திருடி, வாகனங்களில் ஏற்றி சென்றனர். இது குறித்து மூர்த்தி கொடுத்த புகாரில், பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us