sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

/

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

மொபைல் போன்களை திருடிய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது


ADDED : ஆக 02, 2024 01:34 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வா, 20; பட்டதாரி. இவர் தனது தம்பியுடன் கடந்த 23ம் தேதி வீட்டில் துாங்கியுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான 2 விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விஷ்வா அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பைக்கில் வந்து, விஷ்வா வீட்டில் இருந்த 2 மொபைல் போன்களை திருடி சென்றது தெரியவந்தது.

இருவரையும் பிடித்து விசாரித்ததில் திருடிய 2 மொபைல் போன்களையும், மண்ணாடிப்பட்டைச் சேர்ந்த மனோபாலா, 23; என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, மனோபாலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி

காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us