/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களுக்கு இடையூறு 4 பேர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு 4 பேர் கைது
ADDED : செப் 15, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உருளையான்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி காரமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி 40, சாரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் 32, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாந்தா பார்க் 25, தர்னமந்திர பார்க் 25, ஆகிய 4 பேரும் மதுகுடித்துவிட்டு புரவடைன்ஸ் மால் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக சென்று பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.