sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'வாங்க பழகலாம்' என அழைத்து ஜிப்மர் டாக்டரிடம் ரூ.65 ஆயிரம் பறிப்பு நாமக்கல் வாலிபர்கள் 4 பேர் கைது

/

'வாங்க பழகலாம்' என அழைத்து ஜிப்மர் டாக்டரிடம் ரூ.65 ஆயிரம் பறிப்பு நாமக்கல் வாலிபர்கள் 4 பேர் கைது

'வாங்க பழகலாம்' என அழைத்து ஜிப்மர் டாக்டரிடம் ரூ.65 ஆயிரம் பறிப்பு நாமக்கல் வாலிபர்கள் 4 பேர் கைது

'வாங்க பழகலாம்' என அழைத்து ஜிப்மர் டாக்டரிடம் ரூ.65 ஆயிரம் பறிப்பு நாமக்கல் வாலிபர்கள் 4 பேர் கைது


ADDED : ஜூன் 13, 2024 08:27 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 08:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'வாங்க பழகலாம்' என அழைத்து ஜிப்மர் பயிற்சி மருத்துவரை கெஸ்ட் ஹவுசில் அடைத்து வைத்து ரூ. 65 ஆயிரம் பணம் பறித்து நாமக்கல் வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பியூஸ் அகர்வால்,23; ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் டேட்டிங் மற்றும் சாட்டிங் மொபைல் அப்ளிகேஷனில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலருடன் பேசினார்.

எதிர் முனையில் பேசியவர்கள், ''நாங்களும் புதுச்சேரியில் தான் தங்கியுள்ளோம். உங்களை சந்திக்க வேண்டும். வாங்க பழகலாம்'' என அழைப்பு விடுத்தனர்.

அதனையேற்ற பியூஸ் அகர்வால், நேற்று முன்தினம் மதியம் புதுச்சேரி சவுரிராயலு வீதியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸ் அறைக்கு சென்றார். அங்கிருந்த 4 பேர், பியூஸ் அகர்வாலை சுற்றி வளைத்து தாக்கி, அவரது வங்கி கணக்கில் இருந்து ஜிபே மூலம் ரூ.65 ஆயிரத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.

அவர்களிடம் இருந்து தப்பி வந்த டாக்டர் பியூஸ் அகர்வால், ஒதியஞ்சாலை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் மர்ம நபர்கள் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து, அதில் கிடத்த தகவலின் அடிப்படையில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் நாமக்கல் மாவட்டம், கணேசபுரம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த சரவணன்,24; திருச்சி சாலை, அழகர் நகர் கவுதம்,26; சிவகாம பிள்ளை தெரு டேனியல் ராஜ், 25; ஆண்டவர் நகர் கவின்,23; என்பதும், 4 பேரும் நாமக்கல்லில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதையடுத்து, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் வைத்திருந்த 4 மொபைல் போன்கள், ரூ.65 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். நால்வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us