ADDED : ஜூன் 09, 2026 07:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சேதராப்பட்டு, மயிலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், கடையில் சோதனை நடத்தி, குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, குட்கா விற்ற விழுப்புரம், ஆகாசம்பட்டை சேர்ந்த பச்சையப்பன், 55, என்பவரை போலீசார் கைது செய்தனர். குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மூலக்குளம் பெரம்பை ரோடு, பாரீஸ் நகர் சந்திப்பில் குட்கா விற்ற மூலகுளம் ஜோசப் பாலு, 47, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர். அதேபோல், வெங்கட்டாநகர் 4 வது தெருவில் குட்கா விற்ற வெங்கட்டா நகர் நாராயணசாமி, 45; கிருஷ்ணமூர்த்தி மற்றும் 45 அடி சாலையில் குட்கா விற்ற வெங்கட்டாநகரை சேர்ந்த பரஸ்மல், 54, ஆகியோரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.
