sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு

/

சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு

சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு

சிறையில் மொபைல்போன் பறிமுதல் தண்டனை கைதி மீது வழக்கு பதிவு


ADDED : ஜூலை 20, 2024 04:53 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் மொபைல்போன் பறிமுதல் விவகாரத்தில் தண்டனை கைதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் 250க்கும் அதிகமாக தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள பிரபல ரவுடிகள் மொபைல்போன் மூலம் வெளியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா உத்தரவின்பேரில், எஸ்.பி.க்கள் வீரவல்லபன், பக்தவாச்சலம், ஜிந்தா கோதண்டராமன், வம்சீதரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கணேஷ், கார்த்திகேயன், ஜெய்சங்கர், கீர்த்திவர்மன் தலைமையில் 85 போலீசார் கடந்த 17 ம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, காலாப்பட்டு சிறைக்குள் சென்று கைதிகள் தங்கியுள்ள அறைகளில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

தண்டனை கைதிகள் பிரிவில் முதலியார்பேட்டை போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற பரமசிவம் (எ) சிவாவிடம் இருந்து ஒரு மொபைல்போன், சிறை கோவில் வளாகம் பகுதியில் ஒரு மொபைல்போனும், தண்டனை கைதிகள் பிரிவில் 3 சார்ஜர், 3 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us