sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

படகு குழாமில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

/

படகு குழாமில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

படகு குழாமில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

படகு குழாமில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


ADDED : ஜூன் 10, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர்.

புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா இடங்கள், கடற்கரை பகுதி, பூங்காக்கள் படகு குழாம் உள்ளிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடலுார் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமில், நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போதிய படகுகள் இல்லாமல் இருந்ததால், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டும் படகு குழாமில் வெளி மாநிலங்களில் இருந்து வருவதால், இரண்டு நாட்களில் மட்டும் 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சுற்றுலா துறைக்கு வருமானம் கிடைத்து வருகிறது. படகு குழாமிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை சுற்றுலா துறையினர் செய்து கொடுப்பதில்லை என சுற்றுலா பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us