நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: நெட்டபாக்கம் அடுத்த சூரமங்கலம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் 58; பார்வையற்ற மாற்றுத்திறனாளி.
இவர் கடந்த 24ம் தேதி இரவு சூரமங்கலம்-மடுகரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பைக் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில், கிருமாம் பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

