/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலை மாணவியை திருமணம் செய்த டிரைவர் போலீசில் தஞ்சம்
/
பல்கலை மாணவியை திருமணம் செய்த டிரைவர் போலீசில் தஞ்சம்
பல்கலை மாணவியை திருமணம் செய்த டிரைவர் போலீசில் தஞ்சம்
பல்கலை மாணவியை திருமணம் செய்த டிரைவர் போலீசில் தஞ்சம்
ADDED : மே 25, 2024 04:00 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், இவரது மகள் கீர்த்தனா, 23, இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவாக பணி செய்துவரும் அரியாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ், 29; கீர்த்தனாவை திருமணம் செய்து கொண்டு, நேற்று புதுச்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

