ADDED : மே 15, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த விவசாயி இறந்தார்.
திருக்கனுார் அடுத்த முட்ராம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 63. இவர் நேற்று முன்தினம் காலை வில்லியனுார் மார்க்கெட் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அருகில் அதிகமாக குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.