sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏ.டி.எம்.,மில் உதவி செய்வது போல் பணம் 'அபேஸ்' செய்த நபர் கைது

/

ஏ.டி.எம்.,மில் உதவி செய்வது போல் பணம் 'அபேஸ்' செய்த நபர் கைது

ஏ.டி.எம்.,மில் உதவி செய்வது போல் பணம் 'அபேஸ்' செய்த நபர் கைது

ஏ.டி.எம்.,மில் உதவி செய்வது போல் பணம் 'அபேஸ்' செய்த நபர் கைது


ADDED : மார் 31, 2024 04:58 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால், : காரைக்காலில் ஏ.டி.எம்., மையத்தில் உதவிசெய்வது போல் 11 ஆயிரம் ரூபாயை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், பச்சூர் கீழபுத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 43. இவர், தனியார் பள்ளியில் பணிபுரிகிறார். கடந்த 7ம் தேதி வங்கியின் புதிய ஏ.டி.எம்., கார்டை எடுத்துகொண்டு பாரதியார் சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார். புதிய ஏ.டி.எம்., கார்டை ரகசிய எண் பதிவு செய்யும்போது, அங்கிருந்த நபர், ஒருவர் பணம் எடுத்து தருவதாக கூறினார்.

அதைநம்பி வெங்கடேசன் தனது ஏ.டி.எம்., கார்டை அவரிடம் கொடுத்தார். பின்னர் புதிய ஏ.டி.எம்., கார்டு ரகசிய எண்ணை பதிவு செய்து, கார்டை மட்டும் கொடுத்தார். பணம் வரவில்லை என தெரிவித்தார். மறுநாள் வங்கி கணக்கில் 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுச்செய்தி வந்துள்ளது.

இதுக்குறித்து நகர காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சுவிங்ளின், 34, என்பவர் ஏ.டி.எம்., மையத்திற்கு வரும் நபர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரொக்கம், ஆறு ஏ.டி.எம்., கார்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us